நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி 2-வது நாளாக நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து நெல்லையில் கொட்டிச் சென்றது பூதாகரமான நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் கழிவுகளை கேரளாவே அள்ளி வருகிறது. இந்த நிலையில், இலந்தைகுளம்,வேளார்குளம், கோடகநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கழிவுகள் ஞாயிற்றுக்கிழமையன்று 18 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் கழிவுகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, மீண்டும் 2ஆவது நாளாக நீடிக்கிறது. மேலும் 5 டிப்பர் லாரிகள் கேரளாவில் இருந்து வந்து கழிவுகள் அள்ளப்பட்டு வருகிறது.