கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், இளம்பெண் ஒருவரால் ஆட்டோவில் தவறவிடப்பட்ட ரூபாய் 2,67,000 மற்றும் வங்கி புத்தகத்தை அந்த ஆட்டோ டிரைவர் அன்வர் சாதிக் குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வறுமையிலும் நேர்மையை கைவிடாமல் நடந்துகொண்ட அவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.