கோவை மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16 ஆயிரம் கனஅடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.