சேலம் எடப்பாடி அருகே 14 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்களும், மாணவ, மாணவிகளும் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். பொன்னம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த பொன்.தன்ராஜ் ஓய்வுபெற்ற நிலையில், அவரை சாரட் வண்டியில் ஏற்றி மேளதாளம் முழங்க வழியனுப்பி வைத்தனர்.