காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 129 சவரன் தங்க நகை, 21 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 31ம் தேதி ராகவேந்திரா நகரைச் சேர்ந்த சித்த மருத்துவ ஊழியர் முத்துப்பெருமாள் வீட்டில் இக்கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 3 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். அப்போது செட்டிப்பேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக பைக்கில் சென்ற 2 பேரை பிடித்து விசாரித்து, சோதனை செய்ததில் அவர்களிடம் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்... வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு