தூத்துக்குடி எத்திலப்ப நாயக்கன்பட்டி அருகே சரக்கு வாகனத்தின் மீது, பின்னால் வந்த ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் நாச்சியார்புரம் பகுதியில் இருந்து 12 விவசாய கூலி பெண் தொழிலாளர்களுடன் வந்த சரக்கு வாகனத்தில் பின்னால் வந்த ஆம்னி பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 12 பெண்களும் படுகாயம் அடைந்த நிலையில், அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.