சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், ஜூன் மாதம் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை ஆகிய 5 பேருந்து பணிமனைகளில் இருந்து இந்த பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சார்ஜர் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் பணிகள் முழு வீச்சல் நடைபெற்று வருகிறது. மாற்றுத் திறனாளிகள், சிறியவர்கள், முதியவர்கள் என அனைவராலும் சுலபமாக ஏறி-இறங்கும் வகையில் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.