விழுப்புரம் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 20 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோலியனூரை சேர்ந்த இளம் பெண்ணை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக, குமரேசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.