நடிகர் விஷாலுக்கும், ரவி அரசுக்கும் மோதல் முற்றுவதால் மகுடம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட மகுடம் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதால், இப்படத்தினை விஷாலே இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தீபாவளி அன்று விஷால் வெளியிட்டார். கதை மட்டுமே ரவி அரசு என படத்தின் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது விஷால், ரவி அரசு இடையே மோதல் முற்றியுள்ளதால் மகுடம் படப்பிடிப்பினை பெப்சி அமைப்பு மற்றும் இயக்குநர்கள் சங்கம் இணைந்து நிறுத்தியுள்ளனர். விஷால் படத்தை இயக்க ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ் ரவி அரசு இடமிருந்து கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பை தொடங்க முடியும் என்று கூறியுள்ளனர்.