இனி வரும் படங்களில் கதாநாயகனாக மட்டுமே நடிக்கப்போவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒரு கட்டத்தை தாண்டிய பிறகு மீண்டும் அந்த பாதைக்கு செல்வது கடினம் எனவும், அப்படி சென்றால் தன்னை கதாநாயகனாக வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த கதாபாத்திரம் வலிமையானதாகவும், என்னை மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு செல்லும் படியாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.