இளம் திறமையாளரான பாடகி தீ இன்னும் 15 ஆண்டுகளில் 100 சின்மயி மற்றும் ஷ்ரேயா கோஷல்களை விழுங்கலாம் என பாடகி சின்மயி புகழ்ந்து பேசியுள்ளார். தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை தீதான் பாடியிருப்பார் என்றும், ஆனால் அன்று அவர் ஊரில் இல்லாததால் தாம் பாடியதாகவுவும் கூறியுள்ளார். தமக்கு கிடைத்த வரவேற்பை நம்பவே முடியவில்லை என ஆச்சரியத்துடன் குறிப்பிட்ட சின்மயி, தீக்கு தனித்துவமான குரல் வளம் உண்டு என்றும், தமிழில் முத்த மழை பாடலில் வித்தியாசத்தைக் கொடுப்பதற்கு தீயை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.