இயக்குநர் முத்தையா கதாநாயகன் அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குட்டிப்புலி, கொம்பன், மருது, விருமன் போன்ற பல்வேறு படங்களை இயக்கிய முத்தையா, கடைசியாக காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது முத்தையா தனது மகனை வைத்து சுள்ளான் சேது என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், புதிய படம் ஒன்றில் முத்தையாவே கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் இயக்குநர் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.