இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2 கோடி ரூபாய் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வரும் "வீர ராஜா வீரா" பாடல் தொடர்பாக இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி ரூபாய் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் அஜய் திக்ப்பால் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள் டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.