வாலி, பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் தனது திரை வாழ்க்கையின் முக்கியமான படங்கள் என்று நடிகை சிம்ரன் கூறினார். இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 1999-ம் ஆண்டு முதல் சரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.